பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்; மாவட்டத்தில் 26 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதினர்
- கடும் சோதனைக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
- தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் இன்று பிளஸ்-1 பொது தேர்வு தொடங்கியது. அடுத்த மாதம் 5-ந்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 225 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.
காலையிலே மாணவ- மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். செல்போன், கால்குலேட்டர் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
கடும் சோதனைக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
காலை 10 பணிக்கு தேர்வு தொடங்கியது. மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.
தேர்வு பணியில் 112 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் , 112 துறை அலுவலர்கள், 7 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 27 வழித்தட அலுவலர்கள், 139 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள், 1961 அறை கண்காணிப்பாளர்கள், 194 சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 225 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தேர்வு மையங்களில் தடையில்லா குடிநீர், மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது. தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக பேருந்துகள் இயக்கப்பட்டன.