உள்ளூர் செய்திகள் (District)

தென்காசி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்கள் கல்லூரி களப்பயணம்

Published On 2023-03-03 08:55 GMT   |   Update On 2023-03-03 08:55 GMT
  • களப்பயணத்தை முதன்மை கல்வி அலுவலர் கபீர் தொடங்கி வைத்தார்.
  • 530 மாணவ, மாணவிகள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

செங்கோட்டை:

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-2 பயிலும் மாணவ, மாணவிகளை உயர்கல்வி படிப்பதற்கு ஆர்வமூட்டும் வகையில் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர். களப்பயணத்தை முதன்மை கல்வி அலுவலர் கபீர் தொடங்கி வைத்தார்.

ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள 53 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 530 மாணவ, மாணவிகள் சுரண்டை அரசு கலைக்கல்லூரி, சங்கரன்கோவில் அரசு கலைக்கல்லூரி, கடையநல்லூர் அரசு கலைக்கல்லூரி, ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி, குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி ஆகிய 6 கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் கல்லூரிகளில் செயல்படும் பல்வேறு துறைகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், கலையரங்கம், நூலகம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை மாணவ, மாணவிகள் நேரடியாக பார்வையிடுவதால் உயர் கல்வி குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News