உள்ளூர் செய்திகள்

தனியார் ஆஸ்பத்திரிகளில் எத்தனால் பயன்பாடு குறித்து போலீசார் சோதனை

Published On 2024-06-21 05:35 GMT   |   Update On 2024-06-21 05:44 GMT
  • கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு கண் பார்வை பறிபோனது.
  • ஆய்வகங்களில் எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

திண்டுக்கல்:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராய விற்பனை, சட்ட விரோத மது விற்பனை குறித்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு கண் பார்வை பறிபோனது. இதற்கு காரணம் போதைக்காக பயன்படுத்தப்படும் மெத்தனால், எத்தனால் வேதிப்பொருட்கள் எனத் தெரிய வந்துள்ளது. எனவே இதனை கண்காணிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆஸ்பத்திரி, கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களில் எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் நகர் பகுதியில் செயல்படும் ஆஸ்பத்திரிகளில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

தனியார் ஆஸ்பத்திரிகள், கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களில் அளவுக்கு அதிகமாக எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், ஆஸ்பத்திரிகளில் உள்ள ஆயவகங்களில் சோதனை நடத்த உள்ளதாக மது விலக்கு போலீசார் தெரிவித்தனர்.

நகர் முழுவதும் நடைபெற்ற அதிரடி சோதனையில் கள்ளச்சாராயம் எங்கும் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் சட்ட விரோதமாக மது விற்பனைக்கு பதுக்கிய 345 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News