உள்ளூர் செய்திகள் (District)

அய்யாக்கண்ணுவை வீட்டுக்காவலில் சிறை வைத்த போலீசார்

Published On 2024-08-01 08:23 GMT   |   Update On 2024-08-01 08:23 GMT
  • கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்க திட்டம்.
  • 100-க்கும் மேற்பட்ட போலீசார் காவல்.

திருச்சி:

திருச்சியில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் இன்று அய்யாக்கண்ணுவின் இல்லத்தில் இருந்து திரண்டு புறப்பட தயாராகியுள்ளனர்.

இந்த நிலையில், திருச்சி மாநகர போலீசார் அங்கு வந்து அவர்களை வெளியில் செல்ல முடியாதவாறு வீட்டு காவலில் அடைத்து சிறை வைத்தனர். மேலும் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுன்னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடிசெய்யவேண்டும், வேளாண் உற்பத்திற்கு 2 மடங்கு லாபம் கொடுக்க வேண்டும், மரபணு மாற்று விதையை அனுமதிக்கக்கூடாது, எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

இன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்க திட்டமிட்டனர். மற்ற மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திருச்சியில் மட்டும் எங்களை போலீசார் வீட்டுக்காவலில் சிறை வைத்தது வேதனையாக உள்ளது' என்றார். 

Tags:    

Similar News