உள்ளூர் செய்திகள்

மருதூர் தெற்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் தொகுப்பினை திமுக ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் வழங்கினார்.

வேதாரண்யம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா

Published On 2023-01-12 09:05 GMT   |   Update On 2023-01-12 09:05 GMT
  • மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
  • கூட்டுறவு சங்க இயக்குனருமான உதயம் முருகையன் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பொருட்களான அரிசி, சீனி, கரும்பு ரொக்கம் ஆயிரம் ரொக்கத்தினை வழங்கினார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 4607 குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கூட்டுறவு சங்க இயக்குனருமான உதயம் முருகையன் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பொருட்களான அரிசி, சீனி, கரும்பு ரொக்கம் ஆயிரம் ரொக்கத்தினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வங்கி செயலாளர் அசோகன் மற்றும் கூட்டுறவுசங்க துணை தலைவர் செந்தில் இயக்குனர் மதியழகன், சிங்காரவேலு மற்றும் திமுக மாவட்ட பிரதிநிதிகள் ராமநாதன், வீரமணி உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

இதே போல் வாய்மேடு, அங்காடியில் மாவட்ட தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.

இதே போல் தகட்டூர், தாணிக்கோட்டகம் கருப்பம்புலம் ஆகிய ஊராட்சிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தகட்டூர்கூட்டுறவு சங்க தலைவர் நெடுஞ்செ ழியன்கூட்டுறவு சங்க செயலாளர்கள் மதியழகன் தாணிகோட்டகம் தெட்ச ணமூர்த்தி கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News