உள்ளூர் செய்திகள்

தருமபுரி உழவர் சந்தையில் தரம் இல்லாத தக்காளிகள் பலரக விலையில் விற்பனை

Published On 2023-07-27 09:53 GMT   |   Update On 2023-07-27 09:53 GMT
  • உழவர் சந்தை விலை பட்டியலில் இரண்டாம் ரக தக்காளி 80 ரூபாய் என விலைப் பட்டியலை வெளியிட்டு விட்டு 94, 96, 98 ரூபாய் என பல ரகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
  • உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள் தக்காளி விலை பட்டியலையும் பார்த்து மலைத்து போய் செல்கின்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் முக்கிய பயிராக தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பல ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

குறிப்பாக பாலக்கோடு, காரிமங்கலம், ராயக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி பிரதான தொழிலாக வருடம் முழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு விளையும் தக்காளி பழத்திற்கு தனி மவுசு உண்டு சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்க ளுக்கும் வெளி மாநிலங்க ளான பெங்களூர், கேரளா விற்கும் ஏற்றப்படுகிறது.

இந்த நிலையில் தக்காளி விளைச்சலில் ஈடுபடும் விவசாயிகளிடம் வியாபாரிகள் நேரடியாக சென்று முதல் ரகம், இரண்டாம் ரகம் என தரம் பிரிக்கப்பட்டு 40 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை தக்காளியை வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு வாங்கி செல்லும் தக்காளிகள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் பொழுது 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது போன்ற விலை உயர்வை கட்டுப்படுத்து வதற்காக உழவர் சந்தை தொடங்கப்பட்டது. உழவர் சந்தையில் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறி வகைகளை நேரடியாக நுகர்வோர்க்கு விற்பனை செய்வதற்காக தொடங்கப் பட்டது.

ஆனால் தருமபுரி உழவர் சந்தையில் உழவர்களே இல்லாத வியாபாரிகளின் உழவர் சந்தையாக மாறி உள்ளது.

விவசாயிடமிருந்து 70 ரூபாய்க்கு வாங்கப்படும் முதல் ரக தக்காளி உழவர் சந்தையில் 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கழிவு செய்யப்பட்ட இரண்டாம் ரக தக்காளிகள் 94, 96, 98, 100, 106 ரூபாய் என பல ரகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

வேளாண்மை துறை வெளியிடும் உழவர் சந்தை விலை பட்டியலில் இரண்டாம் ரக தக்காளி 80 ரூபாய் என விலைப் பட்டியலை வெளியிட்டு விட்டு 94, 96, 98 ரூபாய் என பல ரகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள் தக்காளி விலை பட்டியலையும் பார்த்து மலைத்து போய் செல்கின்றனர்.

வெளிச்சந்தையில் தரமான தக்காளி 100 ரூபாய் விற்பனை செய்யப்படும் நிலையில் கழிவு செய்ய ப்பட்ட இரண்டாம் ரக தக்காளிகளை வியாபாரி களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News