உள்ளூர் செய்திகள் (District)
மறைமலைநகர், கூடுவாஞ்சேரியில் நாளை மின்தடை
- மறைமலைநகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (வியாழக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மறைமலைநகர் என்.எச்.1, என்.எச்.2, காட்டூர், ரெயில் நகர், காந்தி நகர், விஷ்ணுபிரியா அவென்யூ, காட்டாங்கொளத்தூர், காவனூர், கொருகந்தாங்கல், வி.ஜி.என்., இந்திரா நகர், நின்னக்கரை, கோனாதி, கூடலூர், கடம்பூர், பேரமனூர், சட்டமங்கலம், திருக்கச்சூர், தெல்லிமேடு, செங்குன்றம், மல்ரோசபுரம், கீழக்கரணை, மறைமலைநகர் சிட்கோ தொழிற்பேட்டை, கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லூர், காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம், ஆதனூர், நந்திவரம், மகாலட்சுமி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.