உள்ளூர் செய்திகள் (District)

அரியலூர் பகுதியில் 17-ந் தேதி மின் நிறுத்தம்

Published On 2022-11-15 08:38 GMT   |   Update On 2022-11-15 08:38 GMT
  • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் சேவை இருக்காது.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே அரியலூர் துணை மின் நிலையத்தில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அரியலூர், வானாபுரம், பகண்டை கூட்டுரோடு, ஏந்தல், மரூர், கடம்பூர், ஓடியந்தல், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரிய கொள்ளியூர், வடகீரனூர், மைய னூர், ஜெ. சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார்பாளையம், வடமாமாந்தூர், கடுவனூர், வடபொன்பரப்பி, இளைய னார்குப்பம், ஜம்படை, திரு வரங்கம், கள்ளிப்பாடி, ரெட்டி யார்பாளையம், கரையாம்பா ளையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் சேவை இருக்காது. இந்த தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

Tags:    

Similar News