- நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்காது.
- குளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
அவினாசி :
பசூர்துணை மின் நிலையத்தில் நாளை 13-ந் தேதி (திங்கட்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பசூர் பூசாரி பாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமா புதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவ பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்காது.
இதே போல் கானூர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கானூர், அல்லப்பாளையம் , கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பூசாரி பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், மொண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதுபோல் திருப்பூர் கலெக்டர் அலுவலக துணை மின் நிைலயத்தில் பாரதிநகர் பீடரில் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 13-ந் தேதி மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட இந்திரா நகர், திருப்புரான் தோட்டம், பாரதி நகர், லட்சுமி நகர், செல்வலட்சுமி நகர், குளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பரஞ்ஜோதி, ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.