உள்ளூர் செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வி.கே.புரம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் நாளை மின்தடை

Published On 2023-01-24 09:47 GMT   |   Update On 2023-01-24 09:47 GMT
  • விக்கிரமசிங்கபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • சம்மன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறி யாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள் ளதாவது:-

கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் காரையார், சேர்வலார், பாபநாசம், வீ.கே.புரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுக பட்டி, கோட்டை விளைபட்டி, முதலியார் பட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும்.

இதேபோல ஆழ்வார் குறிச்சி துணை மின் நிலையளுக்கும் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

எனவே ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், ஏபி.நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான் குளம், சம்மன் குளம், செல்லபிள்ளை யார் குளம் உள்ளிட்ட பகுதி களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News