நிலக்கோட்டையில் பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
- முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- கள்ளர் பள்ளிகளின் இணை இயக்குனரை உடனடியாக பணி மாறுதல் செய்ததை வரவேற்கும் விதமாக தமிழக முதல்-அமைச்சருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டையில் தமிழக பிரமலைக்கள்ளர்கள் கூட்டமைப்பு, முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழக பிரமலைக்கள்ளர்கள் கூட்டமைப்பு மாநில மூத்த தலைவர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது. ராஜாராம், ஜெயராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முக்குலத்தோர் பிரிவு மாவட்டத் தலைவர் ராஜசேகரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில், மதுரை,திண்டுக்கல், தேனி , உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளுக்கு மதுரை கள்ளர் சீரமைப்பு துறை கள்ளர் பள்ளிகளின் இணை இயக்குனரை உடனடியாக பணி மாறுதல் செய்ததை வரவேற்கும் விதமாக தமிழக முதல்-அமைச்சருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில பொருளாளர் இளங்கோ,மாவட்டச் செயலாளர் வக்கீல் மாயாண்டி, ஒன்றிய துணை தலைவர் மாவலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.