உள்ளூர் செய்திகள் (District)

எளம்பலூர் கோயிலில் சிறப்பு பூஜை விழா

Published On 2023-09-22 06:33 GMT   |   Update On 2023-09-22 06:33 GMT
  • பெரம்பலூர் அருகே எளம்பலூர் கோயிலில் சிறப்பு பூஜை
  • மெய்யன்பர்கள் சிறப்பு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னைஈஸ்வரர் ஆலயத்திலும், ஸ்ரீலஸ்ரீ அன்னை சித்தர் அதிஷ்டான சமாதி மணிமண்டபத்தில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் சிங்கப்பூர்,

ஆத்ம ஞான அன்பு இல்லத்தை சேர்ந்த ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி ஆலய அமைப்பு மெய்யன்பர்கள் சிறப்பு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் மாதாஜி ரோகிணி, தவயோகி தவசிநாதன் சுவாமிகள், ராதா மாதாஜி, சிங்கப்பூர் பாரி சுவாமிகள், ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆலய குருசுவாமி ராகவேந்திர, தலைவர் பாரதி மற்றும் மெய்யன்பர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News