உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்

சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சமூக விரோத செயல்களால் பொதுமக்கள் அச்சம்

Published On 2023-11-22 06:50 GMT   |   Update On 2023-11-22 06:50 GMT
  • அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் சட்ட விரோதச் செயல்கள் அரங்கேறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
  • சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னமனூர்:

சின்னமனூா் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெறும் சமூக விரோதச் செயல்களை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்த வேண்டுமென நோயாளி களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனா்.

சின்னமனூர் அருகே பூலாநந்தபுரம், சீலைய ம்பட்டி, அப்பிப்பட்டி, வேப்பம்பட்டி, காமாட்சி புரம், எரசை, மாா்க்கை யன்கோட்டை. குச்சனூர், அழகாபுரி. உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வருகின்றனர்.

இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் சட்ட விரோதச் செயல்கள் அரங்கேறு கின்றன.

மது அருந்துதல், கஞ்சா விற்பனை, பாலியல் தொழில் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதால் இரவு நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

இதனால் உடனடியாக இந்த அரசு ஆஸ்பத்திரி நுழைவாயில் பகுதி 2 கேட்டிற்கும் காவலாளிகளை நியமிக்க வேண்டும். மேலும் சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News