உள்ளூர் செய்திகள் (District)

மகள்களுடன் மனு அளிக்க வந்த தாய்

Published On 2023-03-21 07:25 GMT   |   Update On 2023-03-21 07:25 GMT
  • 25 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் சப்ளை இல்லை என்று குற்றச்சாட்டு
  • மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கரிமேடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் லெட்சுமி என்பவர் மனு அளிக்க வந்தார். இரண்டு மகள்களுடன் லெட்சுமி அளித்த மனுவில், குடியிருப்பு நலச்சங்கத்தினர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும், 25 நாட்களாக வீட்டிற்கு தண்ணீர் சப்ளை செய்ய மறுப்பதாகவும் அவர் தெரித்திருந்தார்.


Tags:    

Similar News