உள்ளூர் செய்திகள்

பொன்-புதுப்பட்டி அரசு பள்ளியில் கலை போட்டி

Published On 2022-11-25 09:23 GMT   |   Update On 2022-11-25 09:23 GMT
  • பொன்-புதுப்பட்டி அரசு பள்ளியில் கலை போட்டி நடைபெற்றது.
  • மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில்

புதுக்கோட்டை:

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பாக தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கலை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா, வட்டார கல்வி மேற்பார்வையாளர் நல்லநாகு, பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவிகள் பங்கேற்று மாணவிகள் ஓவியம் வரைதல், களிமண் சிற்பம் செய்தல், வண்ணம் தீட்டுதல், காய்கறி,பழங்கள் மூலம் கலைப்பொருட்களான பொம்மைகள் வடிவமைத்து போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவிகளின் கலை படைப்புகளை ஆசிரியர்கள் பார்வையிட்டு தேர்வு செய்தனர்.

Tags:    

Similar News