உள்ளூர் செய்திகள்

உயர் கல்வி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-01-31 08:37 GMT   |   Update On 2023-01-31 08:37 GMT
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது
  • சுத்தம் மற்றும் பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தல்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் இன்னர்வீல் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய உயர்கல்வி வகுப்பு மாணவிகளுக்கான "சுத்தம் மற்றும் பாதுகாப்பு" விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவை பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளுக்கு சுத்தம் மற்றும் பாதுகாப்பு பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியின் உதவி விரிவுரையாளர் டாக்டர் தமிழரசி விளக்கங்கள் மற்றும் மாணவிகளின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் இன்னர்வீல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் அருணோதயம் ஜெயராமன் மற்றும் செயலாளர் சாந்தி சுப்ரமணியன் முன்னிலை வகிக்க முன்னாள் இன்னர்வீல் சங்கத்தின் தலைவர் அனுராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் வரவேற்புரை வழங்க ஆசிரியர் உதயகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News