உள்ளூர் செய்திகள் (District)

வாகனம் மோதி தச்சு தொழிலாளி பலி

Published On 2023-05-08 08:40 GMT   |   Update On 2023-05-08 08:40 GMT
  • வாகனம் மோதி தச்சு தொழிலாளி பலியானார்
  • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

புதுக்கோட்டை:

விராலிமலை ஒன்றியம், மண்டையூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் மணிகண்டன் (வயது 23). தச்சுதொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு கீரனூருக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் ஏறி அண்ணா பல்கலைக்கழகத்தில் இறங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 12 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மண்டையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News