உள்ளூர் செய்திகள் (District)

மத்திய கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்டவர் மீது வழக்கு

Published On 2023-03-10 06:30 GMT   |   Update On 2023-03-10 06:30 GMT
  • குடும்ப தகராறில் நடந்த சம்பவம்
  • மத்திய கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் மத்திய கூட்டுறவு வங்கி வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கட்டிடத்தின் உரிமையாளர் குடும்பத்தினரிடையே சொத்துப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற் பட்டது. இதைத்தொடர்ந்து, அந்தக் குடும்பத்தை சேர்ந்த ஒருவர். வங்கியி ன் வெளிப்பகுதியை பூட்டியுள்ளார். அலுவலகத்தைத் திறக்க வந்த வங்கி அலுவலர்கள் கதவு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்படி விரைந்து வந்த வங்கி மேலாளர் இது குறித்து வடகாடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், போலீஸார் முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டு வங்கி திறக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து வங்கியின் கிளை மேலாளர் கனகபூஜம் வடகாடு போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார்

புள்ளாட்சிகுடியிருப்பு வெங்கடாசலம் மகன் ராஜராஜன் மீ து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News