உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நெல்லுக்குப் பின் பயறு சாகுபடி செய்ய வேண்டுகோள்

Published On 2023-01-25 07:17 GMT   |   Update On 2023-01-25 07:17 GMT
  • புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நெல்லுக்குப் பின் பயறு சாகுபடி செய்ய வேண்டுகோள் விடுக்கபட்டுள்ளது
  • ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள், 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி ெவளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- 2022-23 ஆம் வருட நெல்லுக்குப் பின் பயறு சாகுபடித் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில், 9000 ஏக்கரில் நெல் அறுவடை வயல்களில், உளுந்து பயிர் சாகுபடி செய்திட, திட்டமிடப்பட்டு, அதற்கான விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள், 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நெல் சாகுபடிக்கு பின் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்வதால், குறுகிய காலத்தில் அதாவது 65 நாளில், பயிர் அறுவடைக்கு வந்து, மகசூலை தந்து, விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதால், ஆகாயத்திலுள்ள தழைச்சத்து, பயிரின் வேர் முடிச்சுகளில் சேமிக்கப்படுகிறது. இதனால் பயிரும் நன்கு வளரும், சாகுபடி நிலமும் வளமடைகிறது.

இதனால் அடுத்து சாகுபடி செய்யும் பயிருக்கான உரச்செலவு குறைகிறது. நெல் அறுவடையான பின்பு, பயறு சாகுபடி செய்யப்படுவதால், நிலம் தரிசாக இல்லாமல், நிலப்பயன்பாடாகிறது. நெல்லுக்குப் பின், பயறு சாகுபடி செய்வதால், கிடைக்கும் சாதகங்கள், விவசாயிகளுக்கு விளக்கிக்கூற, மாவட்ட அளவிலும், வட்டார, குறு வட்டார மற்றும் கிராம அளவில், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News