உள்ளூர் செய்திகள் (District)

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இலுப்பூர் மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை

Published On 2023-05-24 07:47 GMT   |   Update On 2023-05-24 07:51 GMT
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இலுப்பூர் மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளது
  • 100 சதவீத தேர்ச்சிக்கு உழைத்த முதல்வர் மற்றும் ஆசிரியர்களையும் பள்ளியின் நிறுவனத் தலைவர் இரா.சின்னத்தம்பி, தாளாளர் ஆர்.சி. உதயகுமார் மற்றும் இயக்குனர் மா. பூங்குன்றன் ஆகியோர் பாராட்டினர்.

புதுக்கோட்டை.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேபோன்று பிளஸ் 2 பொதுத் தேர்விலும் 600 க்கு 571 மதிப்பெண் இப்பள்ளி சாதனை படைத்துள்ளது. பிளஸ் 2-வில் முகமது ஆதில் என்ற மாணவன் வணிகவியல் கணினி பயன்பாடுகள் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றும், தீக்ஷா என்ற மாணவி வணிகவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றும் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எம்.ஸ்ரீனிவாசன், எஸ். ஸ்ரீநிதி, எம்.பிரவீன் ஆகிய மாணவ மாணவிகள் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், 100 சதவீத தேர்ச்சிக்கு உழைத்த முதல்வர் மற்றும் ஆசிரியர்களையும் பள்ளியின் நிறுவனத் தலைவர் இரா.சின்னத்தம்பி, தாளாளர் ஆர்.சி. உதயகுமார் மற்றும் இயக்குனர் மா. பூங்குன்றன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News