உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி வாகனம் சிறைப்பிடிப்பு

Published On 2022-12-12 09:12 GMT   |   Update On 2022-12-12 09:12 GMT
  • சாலையின் குறுக்கே கம்புகளை ஊன்றி
  • பேரூராட்சி வாகனம் சிறைப்பிடிக்கப்பட்டது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பர்மா காலனி சாலையானது செரியலூர் இணைப்புச்சாலையாக உள்ளது. இங்கு புதிய சாலை அமைக்க கடந்த ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டது. ஆனால் சாலை அமைக்கும் பணிகள் எதுவும் நடைபெறாததால் அப்பகுதியைசேர்ந்த பொது மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்தனர்.

ஆனாலும் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை பர்மா காலனி மக்கள் சாலையின் நடுவில் கற்களை குவித்தும், கம்புகளை ஊன்றியும் அடைப்பு ஏற்படுத்தியதோடு, பேரூராட்சி பணியாளர்களையும், வாகனத்தையும் சிறைப்பிடித்தனர்

பேரூராட்சி பணியாளர்கள் வாகனத்தில் சென்று அப்பகுதியில் உள்ள குப்பைகளை எடுத்து வெளியில் வர முடியாமல் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News