உள்ளூர் செய்திகள் (District)

ஆலங்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி திறப்பு

Published On 2022-07-08 06:06 GMT   |   Update On 2022-07-08 06:06 GMT
  • ஆலங்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி - முதல்வர் திறந்து வைத்தார்
  • அமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கேற்றினார்

புதுக்கோட்டை: :

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, திருமயம் என 2 அரசுக் கல்லூரிகள் தொடங்கப்படும் என கடந்த சட்டப்பேரவையில் அறிவிக்கப்படடது. தொடர்ந்து ஆலங்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்காக கீழாத்தூர் சமத்துபுரம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. நடப்பாண்டு கல்லூரிக்கான சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஆலங்குடி சந்தைப்பேட்டைபகுதியில் வாடகை கட்டடத்தில் கல்லூரிக்கான தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், கணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் கல்லூரியை திறந்து வைத்தார்.

விழாவில், பங்கேற்று சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உஷா செல்வம், திருவர ங்குளம் ஒன்றிய ஆணையர் ஆயிஷா ராணி, கிராம வட்டார வளர்ச்சி கோகுல கிருஷ்ணன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் முதல்வர் திருச்செல்வம், ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், அறந்தாங்கி சேர்மன் மகேஸ்வரி சண்முகநாதன், மகளிர் திட்ட இயக் குனர் ரேவதி, புதுக்கோட்டை அஞ்சுகா மீனாட்சிசுந்தரம், வீரமணி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆலங்குடி சுற்றியுள்ள ஊராட்சி மன்ற தலைவர்க ள் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண் னர் ஆலங்குடி நகர தலைவர் பழனிகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News