உள்ளூர் செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-05-05 06:29 GMT   |   Update On 2023-05-05 06:29 GMT
  • முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாக சாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டது.பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


Tags:    

Similar News