உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கி அருகே முத்துவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
- அறந்தாங்கி அருகே முத்துவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா தாணிக்காடு கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துவிநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் கடந்த 26-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 2 நாட்களாக 3 கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதி சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏம்பல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.