உள்ளூர் செய்திகள் (District)

பொன்னமராவதியில் கலை இலக்கிய போட்டிகள்

Published On 2022-07-13 06:49 GMT   |   Update On 2022-07-13 06:49 GMT
  • பொன்னமராவதியில் கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது
  • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தக திருவிழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பொன்னமராவதியில் கலை இலக்கியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 5-வது புத்தக திருவிழா வரும் 29-ந் தேதி முதல் ஆகஸ்ட் 7-ந் தேதி வரை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற உள்ளது.

அதன்ஒரு பகுதியாக பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில், பொன்னமராவதி வட்டார அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கலை இலக்கியப்போட்டிகள் நடபெற்றது. மூன்று பிரிவுகளாக பேச்சுப் போட்டி, கவிதை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதாசிவம், தமிழநாடு அறிவியல் இயக்க முன்னாள் மாநிலப் பொருளாளர் பிரபாகரன், மாநில செயலர் பாலகிருஷ்ணன், வட்டாரவள மைய மேற்பார்வையாளர் நல்லநாகு, தலைமையாசிரியர் தமிழ்செல்வன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க பொன்னமராவதி ஒன்றியத் த லைவர் அறிவுடைநம்பி, செயலர் ராசு, சுற்றுவட்டாரப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News