மௌண்ட் சீயோன் கல்லூரி மாணவர்கள் திறனறிவு போட்டிகளில் சாதனை
- மௌண்ட் சீயோன் கல்லூரி மாணவர்கள் திறனறிவு போட்டிகளில் சாதனை படைத்தனர்
- வெற்றி பெற்ற இரு அணி மாணவர்களுக்கும் மிஸ்டரால் சொலுஷன்ஸ் சார்பாக சான்றிதழ்களும், ரூ.75,000க்கான காசோலையும் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மௌண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப க்கல்லூரியின் இசிஇ மற்றும் சிஎஸ்இ துறை மாணவர்கள் பெங்களுருவில் உள்ள பெங்களூரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்ற திறனறிவு போட்டிகளில் பங்கேற்றனர். மொத்தம் 39 கல்லூரிகள் கலந்து கொண்ட இப்போட்டிகளை ஆக்ஸிஸ்கேட் மற்றும் மிஸ்டரால் சொலுஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின. இப்போட்டிகளில் எமது கல்லூரியின் மூன்றாம் ஆண்டு இசிஇ துறை மாணவர்கள்விக்ரம் மற்றும் விஜயன் ஆகியோர் மெக்கானிக்கல் பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை தட்டிச் சென்றனர்.
மேலும் எமது கல்லூரியின் மூன்றாம் ஆண்டு சிஎஸ்இ துறை மாணவர்கள்செந்தில்ராஜா, வாஞ்சிநாதன் மற்றும் சரவணன் ஆகியோர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற இரு அணி மாணவர்களுக்கும் மிஸ்டரால் சொலுஷன்ஸ் சார்பாக சான்றிதழ்களும், ரூ.75,000க்கான காசோலையும் வழங்கப்பட்டன. இப்போட்டியில் பங்கு பெற்று கல்லூரிக்கு சிறப்பு சேர்த்த மாணவர்களை கல்லூரிஇயக்குனர் ஜெய்சன்கீர்த்தி ஜெயபரதன், கல்லூரி முதல்வர் பாலமுருகன், கல்லூரி டீன் ராபின்சன் மற்றும் துறைத்தலைவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.