உள்ளூர் செய்திகள் (District)
காதில் மருந்து ஊற்றிய மூதாட்டி சாவு
- மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
- போலீசார் விசாரணை
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள முக்கூட்டுகொல்லையைச் சேர்ந்த பூமி என்பவரின் மனைவி ராஜகுமாரி(வயது 60 ). இவர் தனது காதில் மருந்து ஊற்றி உள்ளார். இதனால் மயக்கம் ஏற்படவே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரைபுதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். வடகாடு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.