உள்ளூர் செய்திகள்

அன்னவாசலில் ரூ.7 லட்சம் செலவில் புதிய கலையரங்கம் திறப்பு

Published On 2023-02-25 08:10 GMT   |   Update On 2023-02-25 08:10 GMT
  • அன்னவாசலில் ரூ.7 லட்சம் செலவில் புதிய கலையரங்கம் திறக்கபட்டது
  • கலையரங்கத்தினை, மாவட்ட கலெக்டர்கவிதா ராமு, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை ஆகியோர்திறந்து வைத்தனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், நார்த்தாமலை ஊராட்சி, நீலியம்மன் கோவில், ஆதிதிராவிடர்காலனியில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கத்தினை, மாவட்ட கலெக்டர்கவிதா ராமு, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்மா.சின்னதுரை ஆகியோர்திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெ.ஆனந்தன், எம்.பிரேமலதா, வட்டாட்சியர்சக்திவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கை.பழனிச்சாமி, ஊராட்சிமன்றத் தலைவர்ம.வேலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News