உள்ளூர் செய்திகள்
- 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
- வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே கலிபுல்லா நகரில் உள்ள நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நூலக வளாகத்தில் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த ஓவியப் போட்டியில் கல்லாலங்குடியை சேர்ந்த சுவேதாஸ்ரீ முதலிடமும், கமலி இரண்டாமிடமும், தர்ஷினி மூன்றாமிடமும் பெற்றனர்.ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக வரைந்த மாணவர்களைப் பாராட்டி ஆலங்குடி வாசகர் வட்டத்தலைவர் பாபு ஜான் மற்றும் கவிஞர்.ராமராமநாதன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். விழாவினை நூலகர் ரெங்கசாமி, ஆசிரியர் கருணாகரன், ஆசிரியர் சசிகுமார்,தன்னார்வலர் அரங்குளவன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் தங்களை நூலத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். நூலகர் ரெங்கசாமி நன்றி கூறினார்.