உள்ளூர் செய்திகள் (District)

ஆலங்குடியில் நாளை மின்தடை

Published On 2022-12-27 09:25 GMT   |   Update On 2022-12-27 09:25 GMT
  • ஆலங்குடியில் நாளை மின்தடை ஏற்படும்
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

ஆலங்குடி

ஆலங்குடி மற்றும் மழையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக மின் விநியோகம் செய்யப்படும் பாச்சிக்கோட்டை களப ம் ஆலங்குடி, ஆலங்காடு, வெட்டன்விடுதி , அரசடிப்பட்டி, மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர் வம்பன், கே.ராசியமங்கலம், மழையூர், கூகைபுளியான்கொல்லை, நைனான்கொல்லை, துவார் ஆத்தாங்கரைவிடுதி ஆகிய பகுதிகளில் டிசம்பர் 28ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என ஆலங்குடி உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News