உள்ளூர் செய்திகள்
- கோவிலில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
- ஒன்பது வகையான ஆராதனை நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் புகழ் வாய்ந்த சோழகாலத்து சுயம்புலிங்க சிவன் கோ வில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு சுயம்புலிங்க சிவபெருமான் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு தீபாராதனை நடைபெற்றது. நந்தி பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேக ஆராதனை நடைபெற்று மலர் அலங்காரம் செய்து சிறப்பு வழிபா டு நடைபெற்றது, இதே போல் திருவுடையார்பட்டி திரு மூல நாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில், திருக்கட்ட ளை சோமசுந்தரேஸ்வரர் மங்களநாயகி அம்பாள் கோவில், பாளையூர் பழங்கரை புராதன ஈஸ்வரர் கோ வில், திருமலைராய சமுத்திரம் கதிர்காமேஸ்வரர் கதி ர்காமேஸ்வரி அம்பாள் கோவில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.