உள்ளூர் செய்திகள்

புனித வியாகுல மாதா ஆலய தேர் பவனி

Published On 2022-06-06 08:37 GMT   |   Update On 2022-06-06 08:37 GMT
  • புனித வியாகுல மாதா ஆலய தேர் பவனி நடைபெற்றது.
  • தேர் பவனியுடன் கொடியிறக்கம் நடைபெற்றது

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே அரசடிபட்டியில் புனித வியாகுல மாதா ஆலயம் உள்ளது. இக்கோவிலில் ஆலய திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முக்கியஸ்தர்களால் தினந்தோறும், புனித வியாகுல மாதா திருஉருவ கொடிறே்று கூட்டுப்பாடல் திருப்பலி மற்றும் கொடி சுற்றுப்பவனியும் நடைபெற்று வந்தது.

நவநாள் சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. அரசடிபட் அருட்திரு பங்குதந்தையர்கள் திருவிழா 9-ம் நாளான நேற்று முன்தினம் தேர்பவனி நடைபெற்றது. மாலையில் திருப்பலி மற்றும் தேர்ப்பவனியும் நடைபெற்றது. இதில் அரசடிபட்டி, பாத்திமா நகர், தவளைப்பள்ளம் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 3 மணிக்கு தேர்ப்பவனியும் கொடியிறக்கமும் நடைபெற்றது.


Tags:    

Similar News