உள்ளூர் செய்திகள் (District)

மயானத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-07-12 09:31 GMT   |   Update On 2022-07-12 09:31 GMT
  • மயானத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
  • தாசில்தார் தலைமையில் நடைபெற்றது

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே சேந்தாக்குடி ஊராட்சியில் வெள்ளக்கொள்ளை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மயானத்திற்காக இடம் உள்ளது. இந்த இடத்தை தனி நபர் ஒருவர் திடீரென்று ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து ஒரு பிரிவினர் ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று மயானத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து புகார் கூறினார்.

இதையடுத்து ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில், வட்ட துணை தாசில்தார் பழனியப்பன், வெண்ணவல்குடி வருவாய் ஆய்வாளர் குப்புசாமி, சேந்தாக்குடி, பாலையூர், வெண்ணவால்குடி கிராம நிர்வாக அதிகாரிகள் சுப உலகநாதன், கார்த்திகையன், கணேசன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மயானத்திற்கு உட்பட்ட இடத்தை அளந்து அடைக்கப்பட்டிருந்த முள்வேலிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை ஆலங்குடி போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News