உள்ளூர் செய்திகள் (District)

விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறை ஒதுக்க தீர்மானம்

Published On 2022-11-28 09:20 GMT   |   Update On 2022-11-28 09:20 GMT
  • விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறை ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
  • புதுக்கோட்டை மாவட்ட மாநாடு நடைபெற்றது

புதுக்கோட்டை:

தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனிதுறை ஒதுக்கி நலத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது.

விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 9-ஆவது மாநாடு கீரனூரில் நடைபெற்றது. தோழர் மருதப்பா நினைவரங்கில் நடைபெற்ற மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். மணிவேல் கொடியேற்றினார். வரவேற்புக்குழுத் தலைவர் தங்கவேல் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கி வைத்து மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், பொருளாளர் சண்முகம் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி மாநில செயலாளர் எம்.சின்னதுரை, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழக அரசு வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீடும், மனைப்பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதோடு புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஏழை மக்களுக்கான சமூக நலத்திட்டங்களை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனிதுறை ஒதுக்கி நலத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டும். மகாத்மாக காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். அவர்களுக்கு வருடத்திற்கு நூறுநாள் வேலையும், நிர்ணயிக்கப்பட்ட கூலியை குறைக்காமலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News