உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு அதிகாரி வீட்டில் கொள்ளை

Published On 2022-07-29 09:25 GMT   |   Update On 2022-07-29 09:25 GMT
  • தீயணைப்பு அதிகாரி வீட்டில் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி
  • உறவினர் வீட்டிற்கு சென்ற போது நடந்த விபரீதம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் புதுத்தெருவை சேர்ந்தவர் அருணகிரி மகன் ராஜ்குமர்(வயது 47). இவர் சிப்காட் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர், திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, டிரஸ்சிங் டேபிளில் இருந்த தங்கதோடு, மொபைல் போன், பவர் பேங்க் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வந்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News