உள்ளூர் செய்திகள் (District)

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்

Published On 2022-11-03 07:13 GMT   |   Update On 2022-11-03 07:13 GMT
  • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது
  • வரும் 14-ந் தேதி நடைபெறுகிறது

புதுக்கோட்டை:

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் வரும் 14-ந் தேதி நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 2022-23ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்துப்பள்ளிகள், கல்லூரிகளில் படித்துவரும் மாணவர்களுக்க தனித்தனியே அரசு விதிமுறைகளின்படியும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் வரும் 14-ந் தேதி (திங்கள் கிழமை) அன்று புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.

இப்போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே பரிசு தொகை மற்றும்; பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன.

கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவே (04322-228840, 99522 80798) தொடர்பு கொள்ளலாம். இப்பேச்சுப்போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர; கவிதா ராமு தெரிவித்துள்ளார;.

Tags:    

Similar News