உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகள்

Published On 2022-12-03 09:20 GMT   |   Update On 2022-12-03 09:20 GMT
  • மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
  • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வருவாய்த்துறை ஆய்வாளர் துரைக்கண்ணு கொடியசைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். சிறப்பு அளைப்பாளராக மேலாத்தூரை சேர்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் குமார் கலந்து கொண்டார். போட்டியில் பலூன் உடைத்தல், இசை நாற்காலி, லெமன் இன் தி ஸ்பூன், மெமரி கேம், நண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News