உள்ளூர் செய்திகள் (District)

தியாகி சத்தியமூர்த்தி சிலைக்கு மாணவ, மாணவிகள் மரியாதை

Published On 2022-08-12 08:47 GMT   |   Update On 2022-08-12 08:47 GMT
  • தியாகி சத்தியமூர்த்தி சிலைக்கு மாணவ, மாணவிகள் மரியாதை செலுத்தினர்
  • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றது

புதுக்கோட்ைட:

இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்தியா முழுவதும் சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்படுகின்ற வேளையில், தமிழக அரசு 3 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அதில் ஒரு மாவட்டமாக புதுக்கோட்டையை அறிவித்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சத்தியமூர்த்தியின் நினைவை போற்றுகின்ற வகையில், தீரர் சத்தியமூர்த்தி பிறந்த திருமயத்தில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்து, தியாகி சத்தியமூர்த்தி சிலைக்கு மாலை அணிவித்து மாணவ மாணவிகளுடன் புகழ் அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மா.மஞ்சுளா புதுக்கோட்டை பள்ளி துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெள்ளையம்மாள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாரதியார், திருமயம் வட்டார கல்வி அலுவலர்கள் மகேஸ்வரன், ஜேம்ஸ் , இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி மற்றும் இருபால் பள்ளி ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News