உள்ளூர் செய்திகள் (District)

மயங்கி விழுந்து முதியவர் சாவு

Published On 2023-03-04 10:00 GMT   |   Update On 2023-03-04 10:00 GMT
  • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்
  • வல்லத்திராக்கோட்டை போலீசார் விசாரணை

ஆலங்குடி, 

ஆலங்குடி அருகே உள்ள எரிச்சி கருமேனியோடையைச் சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் சொக்கலிங்கம் (வயது 55). இவர் அறந்தாங்கி கத்தக்குறிச்சி பிரதான சாலையில் நடந்து சென்ற போது மயங்கிய நிலையில் கீழே அமர்ந்துள்ளார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சொக்கலிங்கம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து சொக்கலிங்கம் மனைவி கலைச்செல்வி (45) வல்லத்திராக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News