உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2022-08-17 09:38 GMT   |   Update On 2022-08-17 09:38 GMT
  • கந்தர்வகோட்டையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
  • மரக்கன்றுகளை நட்டவுடன் பாதுகாப்பிற்காக மூங்கில் கூடு அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.


புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பட்டுக்கோட்டை சாலை மற்றும் திருச்சி சாலையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.விழாவில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நடராஜன், உதவிப் பொறியாளர் கோட்டை ராவுத்தர் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மரக்கன்றுகளை நட்டவுடன் பாதுகாப்பிற்காக மூங்கில் கூடு அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

Tags:    

Similar News