உள்ளூர் செய்திகள் (District)

10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளில் சாதனை படைத்த விராலிமலை பள்ளி மாணவர்கள்

Published On 2023-06-15 07:38 GMT   |   Update On 2023-06-15 07:38 GMT
  • 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளில் விராலிமலை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்
  • தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களை பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டது.

விராலிமலை,

விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் தனிப்பிரிவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களுக்கும் பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அதில் கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் 75 ஆக இருந்தது. அதனை வருகிற கல்வி ஆண்டில் இது 100 சதவீதமாக உயர வேண்டும் என்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், தனி பாடப்பிரிவுகளில் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாய் இருந்த ஆசிரியர்களை பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் மாரிக்கண்ணன், சமூக ஆர்வலரும் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான பூபாலன், விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ரவி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News