உள்ளூர் செய்திகள் (District)

தீயில் கருகி பெண் சாவு

Published On 2023-03-02 08:04 GMT   |   Update On 2023-03-02 08:04 GMT
  • சமையல் செய்த போது விபரீதம்
  • மருத்துமனையில சிகிச்சை பலனின்றி சாவு

ஆலங்குடி, 

ஆலங்குடி அருகே உள்ள மேலக்கோட்டை தெற்கு பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி பெட்சி (வயது 35). இவர் தனது வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீ பிடித்து உள்ளது. தீ வேகமாக பரவியதால் அவர் அலறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து காப்பாற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

Similar News