உள்ளூர் செய்திகள்

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

Published On 2023-06-04 06:16 GMT   |   Update On 2023-06-04 06:16 GMT
  • பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • சரவணன், சரண்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி கைகளால் தாக்கி உள்ளார்

புதுக்கோட்டை:

அரிமளம் ஒன்றியம், ராயவரம் அருகேயுள்ள ஆலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் சரண்யா. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 38) என்பவருக்கும் இடையே வரப்பு அமைப்பதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சரண்யாவின் தந்தை வரப்பு அமைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சரவணன், அவரிடம் எவ்வாறு நீ வரப்பு அமைக்கலாம் என கேள்வி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த சரண்யா அங்கு வந்து சரவணனிடம் என் தந்தையிடம் எப்படி பேசலாம் என கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், சரண்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி கைகளால் தாக்கி உள்ளார். இதுகுறித்து அரிமளம் ேபாலீஸ் நிலையத்தில் சரண்யா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News