உள்ளூர் செய்திகள் (District)
முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

Published On 2022-06-09 09:39 GMT   |   Update On 2022-06-09 09:39 GMT
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 11 இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டைப் பதிவு, முதலமைச்சா் மருத்துவக் காப்பீடு திட்ட பதிவு, உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கான பதிவு ஆகியவை நடைபெறும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கா்லால் குமாவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து வகை உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அவா்களுக்கான அனைத்துத் துறை நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிற 14-ந்தேதி காலை 10 மணி முதல், மாவட்டத்தில் 11 இடங்களில் சிறப்பு முகாம்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகிறது.

அதன்படி, 14 -ந்தேதி போகலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 15- ந்தேதி பரமக்குடி, 16ந்தேதி நயினாா்கோவில், 17- ந்தேதி முதுகுளத்தூா், 18- ந்தேதி கமுதி, 21- ந்தேதி கடலாடி, 22- ந்தேதி ஆா்.எஸ்.மங்கலம், 23-ந்தேதி திருவாடானை, 24- ந்தேதி திருப்புல்லாணி, 28-ந்தேதி மண்டபம், 29-ந்தேதி ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டைப் பதிவு, முதலமைச்சா் மருத்துவக் காப்பீடு திட்ட பதிவு, உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கான பதிவு ஆகியவை நடைபெறும்.

இந்த முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 4, குடும்ப அட்டை நகல் அல்லது ஆதாா் அட்டை நகல், இருப்பிடச் சான்று நகல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News