உள்ளூர் செய்திகள் (District)
ஓட்டப்போட்டியில் பரமக்குடி மாணவர் சாதனை
- ஓட்டப்போட்டியில் பரமக்குடி மாணவர் சாதனை படைத்தார்.
- பிளஸ்-2 மாணவர் ரோகித் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி, 800 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி என இரண்டிலும் பரமக்குடி ஹரிஸ் வர்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவர் ரோகித் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
அடுத்த மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். மாணவரின் சாதனையை பள்ளியின் பொருளாளர் கல்பனா தேவி, முதல்வர் கவிஞர் சோதுகுடி சண்முகன், நிர்வாக மேலாளர் சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் கல்யாண சுந்தரம் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினார்.