உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை:
மின் கட்டண உயர்வை கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ராணிப்பேட்டை நகர செயலாளர் சந்தோஷம் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சம்பத், சந்திரசேகர், விகேஆர்.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.