உள்ளூர் செய்திகள் (District)

விளையாட்டு துறை பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-10-16 07:58 GMT   |   Update On 2023-10-16 07:58 GMT
  • 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது
  • கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை:

தமிழக அரசு விளையாட்டுத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகம் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் 40-வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். சர்வதேச போட்டிகளில் (வெற்றி பெற்றவர்கள், பங்கேற் றவர்கள்), தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற www. sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தகுதியான வீரர், வீராங்கனைகள் விண்ணப் பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய விவர இணைப்புகளுடன் வரும் 31-ம் தேதிக்குள், இணையதள முகவரி அல்லது சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் அளிக்குமாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News