உள்ளூர் செய்திகள் (District)

வீட்டில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

Published On 2023-11-11 07:56 GMT   |   Update On 2023-11-11 07:56 GMT
  • 1¼ கிலோ கைப்பற்றினர்
  • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரத்தில் உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பில் வசித்துவரும் ஆரோக்கியம் என்பவர் மகன் கிளிண்டன் என்கிற வினோத்குமார் (வயது 24). இவரது வீட்டில் கஞ்சா பதுக்கு வைத்திருப்பதாக பாணாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டில் 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை போலீசார் கைப்பற்றினார்.

வீட்டில் இருந்து கஞ்சா விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கிளிண்டனை கைது செய்து சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News