உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டையில் த.மு.மு.க.வுக்கு இலவச ஆம்புலன்ஸ்
- அமைச்சர் காந்தி வழங்கினார்
- ஏராளமானோர் பலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் பல்வேறு கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, அனைத்து சமுதாயத்தினருக்கும் பாரபட்ச மின்றி த.மு.மு.க.வினர் உதவி செய்தனர்.
இந்த சேவையை பாராட்டும் வகையில் , நேற்று கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி , விஸ்வாஸ் அமைப்பின் தலைவர் கமலா காந்தி , டாக்டர் விவேக் , டாக்டர் ஷில்பா விவேக் ஆகியோர் தங்களது குடும்பத்தின் சார்பில் ஜி.கே.எஜுகேஷன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் ராணிப் பேட்டை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அமைப்பினருக்கு ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள ஆம்புலன்சை இலவசமாக வழங்கினார்கள் .
நிகழ்ச்சியில் தொழிலதிபர் ரமேஷ் பிரசாத் , மனிதநேய மக்கள் கட்சி இம்ரான் , த.மு.மு.க. மருத்துவ அணி மாவட்ட தலைவர் முகமது அலி , உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்த னர் .