உள்ளூர் செய்திகள் (District)

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

Published On 2023-11-10 08:26 GMT   |   Update On 2023-11-10 08:26 GMT
  • பீரோவை உடைத்து துணிகரம்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

காவேரிப்பாக்கம்:

பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 62), தனியார் பள்ளி டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி (51). இவர் வழக்கம்போல் நேற்று காலை வீட்டை பூட்டிக் கொண்டு நூறு நாள் வேலைக்கு சென்று உள்ளார்.

பின்னர் வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News